நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஹிந்தியில் ரீமேக்காகும் இயக்குநர் பா.ரஞ்சித் படம்

பா.ரஞ்சித்தின் மெட்ராஸ் திரைப்படம் ஹிந்தியில் மறு உருவாக்கம் செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :7 அக்டோபர் 2021, 7:29 pm IST

பா.ரஞ்சித்தின் மெட்ராஸ் திரைப்படம் ஹிந்தியில் மறு உருவாக்கம் செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் மெட்ராஸ். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். வட சென்னையில் ஒரு சுவரின் காரணமாக இரு தரப்பினரிடையே உருவாகும் பிரச்னையின் அடிப்படையில் சாதிய ஏற்றத் தாழ்வுகளை பதிவு பண்ணியிருப்பார் இயக்குநர் ரஞ்சித். 

Story image

நல்ல வெற்றியைப் பதிவு செய்த இந்தப் படம் இயக்குநர் திரையுலக பயணத்தில் முக்கிய மைல்கல்லாக  அமைந்தது. இந்தப் படம் தான் ரஜினிகாந்த்தை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் ரஞ்சித்திற்கு பெற்றுத் தந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத வகையில் ஒரு சுவரை வில்லனாக சித்திரித்து சுவாரசியமாக திரைக்கதை அமைத்திருப்பார் ரஞ்சித்.

இந்த நிலையில் மெட்ராஸ் திரைப்படம் ஹிந்தியில் மறு உருவாக்கம் செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறதாம். இந்தப் படத்தில் நடிக்கும் கதாநாயகன் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.