'ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது': முதல்வர் ஸ்டாலினுக்கு தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் புகழாரம்

பிரபல தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக புகழாரம் தெரிவித்துள்ளார்.  
'ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது': முதல்வர் ஸ்டாலினுக்கு தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் புகழாரம்

பிரபல தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக புகழாரம் தெரிவித்துள்ளார். 

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான பவன் கல்யாண் ஜனசேனா என்ற கட்சியைத் துவங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் அந்த அறிக்கையுள்ளது.

அதில், ''அன்புக்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும், ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால், ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள். 

உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், மாநிலத்திற்கு மட்டுமல்ல. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com