முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

'கர்ணன்' படத்தை விட, 'ருத்ர தாண்டவம்' இரண்டு மடங்கு புகழைப் பெறும்: பிரபல நடிகர் கருத்து

கர்ணன் படத்தை விட, ருத்ர தாண்டவம் இரண்டு மடங்கு புகழைப் பெறும் என நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார். 

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 10:37 am

DIN

கர்ணன் படத்தை விட, ருத்ர தாண்டவம் இரண்டு மடங்கு புகழைப் பெறும் என நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார். 

திரௌபதி படத்துக்குப் பிறகு மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ருத்ர தாண்டவன். ரிஷி ரிச்சர்டு கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடித்துள்ளார். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், ராதா ரவி, தம்பி ராமையா, மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஃபாரூக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு, ஜூபின் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. 

Story image

விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, இந்தப் படத்தில் எது நியாமானதோ அதனை இயக்குநர் பேசியிருக்கிறார். யார் மனதையும் புண்படுத்தவில்லை. இந்தப் படத்தை பார்த்துவிட்டு மற்றவர்கள் திருந்த வேண்டும். அக்டோபர் 1 ஆம் தேதி வெளியான பிறகு படம் பேசு பொருளாகும். 

கர்ணன் படம் பெற்ற புகழை விட இரண்டு மடங்கு புகழை இந்தப் படம் பெறும். நான் வணங்கும் ஒரு சல தலைவர்களில் அம்பேத்கரும் ஒருவர். இந்தியாவிற்காக அரசியல் சாசன சட்டத்தை எழுதிக்கொடுத்தவர். குறிப்பிட்ட ஒரு சாதிக்காக அரசியல் சாசனம் சட்டம் எழுதவில்லை என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.