நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

திடீர் திருமணம் ?: திருமண விடியோவை பகிர்ந்த 'கண்ணான கண்ணே' நடிகை

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே தொடரில் நடிக்கும் சஹானா, தனது திருமண விடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2021, 11:32 am IST

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே தொடரில் நடிக்கும் சஹானா, தனது திருமண விடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பகல் நிலவு, அழகு ஆகிய தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் நடிகை சஹானா குறிப்பாக அழகு சீரியலில் நடிகை ரேவதியின் மகளாக இவர் நடித்த வேடம் ரசிகர்களிடம் மிக பிரபலம். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே, தாலாட்டு ஆகிய தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். 

Story image

'அழகு' தொடருக்குப் பிறகு 'தாலாட்டு' தொடரிலும் ஸ்ருதி ராஜூடன்  இணைந்து கலக்கிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவருக்கும் அபிஷேக் என்ற மருத்துவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண விடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

Story image

இந்த விடியோவில் திருமண சடங்குகள், வழக்கமாக திருமணத்துக்கு பிறகு மணமக்கள் பங்கேற்கும் விளையாட்டுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.  முடிந்த பிறகு அபிஷேக் சஹானாவிற்கு முத்தமிடுவது அழகான தருணமாக அமைந்துள்ளது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் இந்த விடியோ வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மணமக்களுக்கு தினமணி சார்பாக திருமண வாழ்த்துகள் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.