மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா - சமந்தாவிற்கு சிறந்த நடிகை விருது

திரைப்பட விருதுகளில் முக்கியமான விழாவாகக் கருத்துப்படும் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா 2020-2021 ஆம் ஆண்டிற்கான விருதுகளை அறிவித்திருக்கிறது.

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா - சமந்தாவிற்கு சிறந்த நடிகை விருது

Published On :

திரைப்பட விருதுகளில் முக்கியமான விழாவாகக் கருத்துப்படும் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா 2020-2021 ஆம் ஆண்டிற்கான விருதுகளை அறிவித்திருக்கிறது.

டாக்ஸிவாலா நாயகி பிரியங்கா ஜவல்கர் போட்டோஷூட் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

இந்திய முழுவதும் பல படங்கள் தேர்வாகியிருந்த நிலையில் தமிழில் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஓடிடி தளத்தில் வெளிவந்த 'சூரரைப் போற்று' திரைப்படம் இரண்டு விருதுகளைப் பெற்று அசத்தியிருக்கிறது.

மேலும் இணைய தொடர்களுக்கும் விருதுகள் அளிக்கப்பட்ட நிலையில் சிறந்த நடிகைக்கான விருதை நடிகை சமந்தாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான 'பேமிலி மேன் 2' பாகம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் நடிகை சமந்தாவின் கதாபாத்திரமும் அதிக அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் இணையத் தொடருக்கான சிறந்த நடிகையாக சமந்தா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அதே தொடரில் நாயகனாக நடித்த மனோஜ் பாஜ்பாயிக்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.