ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' திரைப்படமும், 'கேஜிஎஃப் 2' படமும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்குவரவிருக்கின்றன.
ராகவா லாரன்ஸ் தற்போது 'ருத்ரன்' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஃபைவ் ஸ்டார் S.கதிரேசன் தயாரித்து, இயக்கி வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜேசகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ராகவா லாரன்ஸின் படங்கள் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகமும், அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எந்தப் படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
In theaters from 14th April 2022