ஜெய் பீம் படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார். பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்தப் படம் வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
எதற்கும் துணிந்தவன் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் தலா ஒரு பாடலை பாடியுள்ளனராம்.
எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சூரி, புகழ், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.