தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் படம்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் இரண்டு படம் சோனி லைவ் ஓடிடியில் நேரடியாக வெளியானதையடுத்து...

News image
Updated On :28 ஜனவரி 2024, 9:18 am IST

பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பூமிகா என்கிற படத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இது அவருடைய 25-வது படம். 

2010-ல் நீதானா அவன் படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர், ஐஸ்வர்யா ராஜேஷ். 2015-ல் வெளியான காக்கா முட்டை படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு ஒவ்வொரு வருடம் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

பூமிகா படத்தை ரதிந்திரன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு - ராபர்ட், இசை - ப்ரித்வி சந்திரசேகர். இதற்கு முன்பு அஸ்வின், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இது வேதாளம் சொல்லும் கதை என்கிற படத்தை ரதிந்திரன் இயக்கியுள்ளார். 

இந்நிலையில் பூமிகா படம் ஆகஸ்ட் 22 அன்று மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் இரண்டு படம் சோனி லைவ் ஓடிடியில் நேரடியாக வெளியானதையடுத்து அவர் கதாநாயகியாக நடித்த மற்றொரு படமான பூமிகாவும் திரையரங்குகளில் நேரடியாக வெளியாகாமல் மாற்று வழியைக் கண்டுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.