92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

''என் கணவர் இறந்துவிட்டார், அவர் இறந்தபொழுது...'' : பிக்பாஸ் வீட்டில் பவானி ரெட்டி உருக்கம்

பிக்பாஸ் சீசன் 5 புதிய ப்ரமோவில் பவானி ரெட்டி தனது திருமண வாழ்க்கை குறித்து இசைவாணியிடம் பகிர்ந்துகொள்கிறார். 

News image
Updated On :5 அக்டோபர் 2021, 10:36 am

DIN

பிக்பாஸ் சீசன் 5 புதிய ப்ரமோவில் பவானி ரெட்டி தனது திருமண வாழ்க்கை குறித்து இசைவாணியிடம் பகிர்ந்துகொள்கிறார். 

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான இன்று வெளியான இரண்டு ப்ரமோக்களிலும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி மற்ற போட்டியாளர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். 

அந்த வகையில் இசைவாணி தன்னுடைய வாழ்வில் தான் அனுபவித்த துன்பங்களை மற்ற போட்டியாளர்களின் முன்னிலையில் பகிர்ந்து கொண்டார். அதனைக் கேட்ட அனைவரும் கண் கலங்கினர். இந்த நிலையில் மூன்றாவது ப்ரமோ வெளியாகியுள்ளது.

ப்ரமோவில் இசைவாணியும், பவானி ரெட்டியும் பேசிக்கொள்கின்றனர். அப்போது இசைவாணி, பவானி ரெட்டியிடம் உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா எனக் கேட்க, அதற்கு ஆகிவிட்டது. ஆனால் என் கணவர் இறந்துவிட்டார். அவர் இறந்தபொழுது எனக்கு அழுகை வரவில்லை. நான் அதிர்ச்சியடைந்தேன். இறந்த சம்பவத்தை நினைத்து நான் மிகவும் வருத்தமடைந்து இருந்தேன் என்று உருக்கமாக பேசுகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.