ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

'சிவப்பு மஞ்சள் பச்சை' பட கதாநாயகிக்கு திருமணம்: வெளியான புகைப்படங்கள் வைரல்

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் கதாநாயகியாக நடித்த லிஜோமோல் ஜோஸ் என்பவருக்கு அருண் ஆண்டனி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 

News image
Updated On :5 அக்டோபர் 2021, 4:59 pm IST

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் கதாநாயகியாக நடித்த லிஜோமோல் ஜோஸ் என்பவருக்கு அருண் ஆண்டனி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 

மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் லிஜோமோல் ஜோஸ். தமிழில் சித்தார்த்துக்கு ஜோடியாக இவர் நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்ற மைலாஞ்சி பாடல் மிகப் பிரபலம்.

Story image

இதனையடுத்து அவர் தீதும் நன்றும் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.  இந்தப் படத்தில் அவருடன் அபர்னா பாலமுரளியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ரசு ரஞ்சித் இயக்கிய, இந்தப் படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகியிருந்தது. 

இதனையடுத்து சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்து, ஞானவேல் இயக்கியுள்ள ஜெய் பீம் படத்திலும் லிஜோமோல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் நவம்பர் 2 தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் லிஜோமோலுக்கு அருண் ஆண்டணி என்பவருடன் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.