குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தேசிய விருது பெற்ற இயக்குநருடன் 3வது முறையாக இணையும் விஜய் சேதுபதி

காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :14 செப்டம்பர் 2021, 5:54 pm IST

'காக்கா முட்டை' இயக்குநர் மணிகண்டன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரே வாரத்தில் விஜய் சேதுபதியின் 'லாபம்', 'துக்ளக் தர்பார்' ஆகிய படங்கள் வெளியாகின. வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் அனபெல் சேதுபதி திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை படங்களின் இயக்குநர் மணிகண்டனுடன் விஜய் சேதுபதி இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் முழுக்க, முழுக்க கிராமத்துக் கதையாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆண்டவன் கட்டளை படத்துக்குப் பிறகு மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். கடைசி விவசாயி படத்தின் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படம் முதலில் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்டது. தற்போது நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.