நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

'திருச்சிற்றம்பலம்' வசூல் எவ்வளவு?

திரையரங்குகளில் வெளியான நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல் நிலவரம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 1:55 pm IST

திரையரங்குகளில் வெளியான நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல் நிலவரம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தாத்தா, அப்பா, மகன் என தலைமுறைகளின் உறவுகளையும் காதலையும் மையப்படுத்திய உருவாக்கப்பட்ட ‘திருச்சிற்றம்பலம்’ தமிழகத்தில் பெரிய வெற்றியைப் பதிவு செய்து வருகிறது.

முதலில் இப்படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.20 கோடி வசூலித்தாகவும், தற்போது ஒரு வாரத்தில் ரூ.50 கோடி வசூலைத் தாண்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வருகிற ஆக - 31 ஆம் தேதி கோப்ரா, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளதால் இன்னும் 1 வாரத்திற்கு ‘திருச்சிற்றம்பலம்’ திரையரங்குகளில் வசூலைக் குவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் தனுஷூடன் நடிகை நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.