பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நடிகர் மாயி சுந்தர் மறைவு: மன்னார்குடியில் இன்று மாலை இறுதிச்சடங்கு

துணை நடிகர் மாயி சுந்தர் இறுதி நிகழ்ச்சி இன்று மாலை மன்னார்குடியில் நடைபெறுகிறது

News image
Updated On :24 டிசம்பர் 2022, 9:14 am

DIN

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் பலரால் அறியப்பட்ட துணை நடிகர் மாயி சுந்தர் (51) உடல் நலக் குறைவு காரணமாக (டிச.24) சனிக்கிழமை அதிகாலை காலமானார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திருத்துறைப்பூண்டி சாலையில் வசித்து வரும் முத்துகுமார் - சாந்தி தம்பதியருக்கு 2 மகன்கள், ஒரு மகள். இதில் இளைய மகன் ஏற்கனவே இறந்துவிட்டார்.

Story image

மூத்த மகன் சுந்தர், திரைப்படத்தில் நடிக்கும் ஆசையில் சென்னையில் தங்கி அதற்கான முயற்சியில் ஈடுப்பட்டு வந்துள்ளார். ஓரே மகளுக்கு திருணம் முடிந்து அவர் வயதான பெற்றோரை பராமரித்துக்கொண்டு மன்னார்குடியிலேயே குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

சரத்குமார் நடித்த மாயி திரைப்படத்தில் முதல் முறையாக துணை நடிகர் வேடத்தில் நடிக்க சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்ததையடுத்து, தனது பெயருக்கு முன்னாள் மாயி சுந்தர் என மாற்றிக்கொண்டு வெண்ணிலா கபடிக் குழு, ரன், குள்ளநரி கூட்டம், துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகர் வேடத்தில் நடித்துள்ளார்.

அண்மைகாலமாக மஞ்ச காமாலை நோயால் மாயி சுந்தர் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை மருத்துவமனையில் தங்கியும் மற்றும் வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்த வந்த நிலையில் நோயின் தாக்கம் வெள்ளிக்கிழமை இரவு அதிகரித்தையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் மாயி சுந்தர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Story image

மறைந்த மாயி சுந்தரம் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரது உடல், உறவினர்கள் நண்பர்களின் இறுதி அஞ்சலிக்காக மன்னார்குடியில் திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள அவரது இல்லதில் வைக்கப்பட்டுள்ளது. இன்று (டிச.24) மாலை 5 மணிக்கு மன்னார்குடி கீழப்பாலம் நகராட்சி மயானத்தில் உடல் எரியூட்டப்படுகிறது.

மேலும் விவரம் அறிய...  98424 58289

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.