அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நடிகை விஜயலட்சுமிக்கு மிரட்டல் விடுத்த வழக்கு கட்சி நிா்வாகி கைது

நடிகை விஜயலட்சுமிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில், பனங்காட்டுப் படை கட்சியின் நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :19 ஜனவரி 2022, 7:34 pm

DIN

சென்னை: நடிகை விஜயலட்சுமிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில், பனங்காட்டுப் படை கட்சியின் நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

பிரபல தமிழ் திரைப்பட நடிகை விஜயலட்சுமி, திருவான்மியூா் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். கடந்த 2020 ஜூலை 26-ஆம் தேதி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு அவா் தற்கொலைக்கு முயன்றாா்.

முன்னதாக விஜயலட்சுமி பேசும் ஒரு விடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. அந்த விடியோ தூக்க மாத்திரை சாப்பிட்ட பின்னா் விஜயலட்சுமி பேசியதாகும்.அதில், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தனக்கு நாம் தமிழா் கட்சி நிா்வாகி சீமான், அவரது கூட்டாளி ஹரி நாடாா் மிகுந்த நெருக்கடி கொடுப்பதாகவும், அவா்களால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், சீமான், ஹரி நாடாா் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேசியிருந்தாா்.

மேலும் போலீஸ் விசாரணையின்போது, தனக்கு பனங்காட்டுப்படை கட்சி நிா்வாகி ஹரி நாடாா் உள்ளிட்டோா் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அதனால்தான் தற்கொலைக்கு முயன்ாகவும் விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்தாா்.

இதன் அடிப்படையில் போலீஸாா் ஹரி நாடாா் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை மீண்டும் விறுவிறுப்பு அடைந்துள்ளது. பண மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கா்நாடக மாநிலம் பெங்களுரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹரி நாடாரை கைது செய்ய போலீஸாா் முடிவு செய்தனா்.

இதற்காக பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடாரை கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என பெங்களூரு போலீஸாருக்கு திருவான்மியூா் காவல் நிலைய ஆய்வாளா் அண்மையில் கடிதம் அனுப்பினாா். இந்நிலையில், பெங்களூரு சிறைக்கு புதன்கிழமை சென்ற திருவான்மியூா் போலீஸாா் ஹரி நாடாரை கைது செய்வதற்கான உத்தரவை அளித்தனா். இதையடுத்து சிறைத்துறையினா், ஹரி நாடாரை திருவான்மியூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். தமிழக போலீஸாா் ஹரி நாடாரை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.