/

''வின்னர் 2 ஆம் பாகம் பிரம்மாண்டமாக இருக்கும்'' - பிரசாந்த் சுவாரசியத் தகவல்

வின்னர் 2 ஆம் பாகம் முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக இருக்கும் என நடிகர் பிரசாந்த் தெரிவித்தார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:10 pm IST

வின்னர் 2 ஆம் பாகம் முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக இருக்கும் என நடிகர் பிரசாந்த் தெரிவித்தார். 

ஹிந்தியில் வெற்றிபெறற அந்தாதுன் படம் தமிழில் அந்தகன் என்ற பெயரில் உருவாகியுள்ளது. பிரசாந்த் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் கார்த்திக், சிம்ரன், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

நடிகர் பிரஷாந்த் இன்று(வெள்ளிக்கிழமை) திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அந்தகன் விரைவில் வெளியாகும். வின்னர் 2 ஆம் பாகம் முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து வின்னர் 2 ஆம் பாகம் உருவாகவுள்ளது உறுதியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.