விரைவில் ‘ஜோக்கர் 2’ படப்பிடிப்பு தொடக்கம்

ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஜோக்கர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்
விரைவில் ‘ஜோக்கர் 2’ படப்பிடிப்பு தொடக்கம்
Published on
Updated on
1 min read

ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஜோக்கர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் டூட் ஃபிலிப்ஸ் இயக்கத்தில் ஜாக்குவன் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம் ‘ஜோக்கர்’.

ஆர்தர் (ஜாக்குவன் பீனிக்ஸ்) மேடை காமெடியனாகும் முயற்சியில் தன் திறமைகளை வெளிப்படுத்தும் கலைஞன். ஆனால், ஒருகட்டத்தில் குடும்பமும் சமூகமும் அவனை எப்படி மனநோயாளியாக மாற்றுகிறது என்பதை அபாரமான திரைக்கதையால் சொன்ன படமே ‘ஜோக்கர். படத்தில் பீனிக்ஸுன் சிரிப்பும் மிகப்பிரபலம்.

மேலும், இப்படத்தில் நாயகனாக நடித்து மிகச் சிறந்த நடிப்பை வழங்கிய ஜாக்குவன் பீனிக்ஸுக்கு ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.

இந்நிலையில், படத்தின் இரண்டாம் பாகத்தை ‘ஜோக்கர்: ஃபோலி எ டியூக்ஸ்' என்கிற தலைப்பில் இயக்க உள்ளதாக இயக்குநர் டூட் ஃபிலிப்ஸ் தெரித்துள்ளார்.   இதனால், ஜோக்கர் படத்தின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com