12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பிரபல தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர்கள் காதல் திருமணம்: வெளியான புகைப்படங்கள்

தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர்களான விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் யாமினி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. 

Published On :

சிவகார்த்திகேயனின் டாக்டர், அமலா பாலின் ஆடை, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் விஜய் கார்த்திக் கண்ணன். இவர் தற்போது ஒளிப்பதிவு செய்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

தற்போது ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடித்துவரும் 'குளு குளு' படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் விஜய் கார்த்திக் கண்ணனுக்கும் ஒளிப்பதிவாளர் யாமினிக்கும் திருமணம் நடைபெற்றது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். 

ஒரே துறையச் சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொண்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒளிப்பதிவாளர் யாமினி, சில்லுக்கருப்பட்டி, சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்துக்கும் முதலில் யாமினிதான் ஒளிப்பதிவு செய்வதாக இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்திலிருந்து யாமினி விலகிவிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.