'பாரதி கண்ணம்மா', 'பொற்காலம்', 'பாண்டவர் பூமி', 'வெற்றிக்கொடிகட்டு', 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கியவர் சேரன். நீண்ட இடைவேளைக்கு பிறகு திருமணம் படத்தை இயக்கினார்.
பிக்பாஸில் கலந்துகொண்ட அவர் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார். சில காரணங்களால் அந்தப் படம் துவங்கப்படவில்லை.
இந்த நிலையில் இயக்குநர் சேரன் அடுத்ததாக இயக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் பிக்பாஸ் ஆரி நாயகனாக நடிக்க, கலையரசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.
மேலும் 'பேச்சுலர்' படத்தின் மூலம் கவனம் பெற்ற திவ்யபாரதி இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.