இணையத் தொடராகிறது ராமச்சந்திர குகாவின் ‘காந்தி’ பற்றிய புத்தகங்கள்
ராமச்சந்திர குகா எழுதிய காந்தி பற்றிய புத்தகங்கள் இணையத் தொடராக தயாரிக்கப்பட உள்ளது.
பிரபல இந்திய வரலாற்றாசிரியரான எழுத்தாளர் ராமச்சந்திர குகா‘இந்தியா ஆஃப்டர் காந்தி’ ‘காந்தி பிஃபோர் இந்தியா’ ‘காந்தி தி இயர்ஸ் தட் சேன்ச்ட் தி வோர்ல்ட்’ உள்ளிட்ட ஏராளமான காந்தி தொடர்புடைய புத்தகங்களை எழுதியுள்ளார்.
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவருடைய ‘இந்திய வரலாறு காந்திக்கு முன், காந்திக்குப் பின்’ என்கிற புத்தகம் பெரிய கவனத்தை பெற்றது.
இந்நிலையில், ராமச்சந்திர குகா எழுதிய காந்தி தொடர்புடைய நூல்களை வைத்து இணையத் தொடர் ஒன்றை தயாரிக்க இருப்பதாக ‘அப்ளாஸ் எண்டர்டைன்மெண்ட்’ நிறுவனம் அறிவித்துள்ளது.
விரைவில் இதற்கான பணிகளும் தொடங்கபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

