காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

அதர்வாவின் ‘பட்டத்து அரசன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! 

சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா, ராஜ்கிரண் இணைந்து நடித்துள்ள 'பட்டத்து அரசன்’படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Published On :

நடிகர் விமல் நடிப்பில் வெளியான களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் சற்குணம். மேலும், களவாணி 2, டோரா, வாகை சூட வா, நய்யாண்டி, சண்டிவீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவரின் வாகை சூட வா படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில், நடிகர் அதர்வாவை வைத்து ஏற்கெனவே சண்டிவீரன் என்ற படத்தை இயக்கியுள்ள சற்குணம், மீண்டும் அதர்வாவுடன் இணைந்துள்ளார். லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஷ்கரன் மற்றும் ஜிகேஎம் தமிழ்குமரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘பட்டத்து அரசன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

நடிகர் அதர்வாவும், ராஜ் கிரணும் கிராமத்து தோற்றத்தில் இருப்பது போன்று உள்ளது. ஆகையால், இந்த படமும் வழக்கம்போல் சற்குணத்தின் கிராமத்து பின்னணி கொண்ட கதையாகதான் இருக்கும் எனத் தெரிகின்றது.

இந்த படத்தில் ராதிகா சரத்குமாரும் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் ‘யு’ கிடைத்துள்ளது. இந்தப் படம் நவ.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Related Article

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஓடிடி வெளியீடு எப்போது?: அறிவிப்பு

‘ஓய்வெடுக்க முடிவு’: ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அமீர் கான்!

ஹிந்தியில் ரூ. 75 கோடி வசூலித்த காந்தாரா படம்!

நடிகர் கிருஷ்ணா மறைவு: ரஜினி, கமல் இரங்கல்

ஐஸ்வர்யா ராயின் ‘விடை கொடு சாமி விட்டுப் போகின்றேன்...’ பாடல் திடீரென வைரலாக காரணம் என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.