
நடிகை சமந்தா யசோதா படக்குழுவினருடன் மோதலில் ஈடுபட்டதால் படம் தாமதமாவாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நடிகை சமந்தாவுக்கு பெரும்பாலும் சின்மயி தான் டப்பிங் பேசுவார். காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற சில படங்களில் சமந்தா சொந்தக் குரலில் பேசியிருந்தார்.
இந்த நிலையில் சமந்தா தற்போது தெலுங்கில் நடித்துள்ள யசோதா படத்துக்கு தயாரிப்பு தரப்பினர் சின்மயி டப்பிங் பேச திட்டமிட்டுள்ளனர். இதனையறிந்த சமந்தா நானே டப்பிங் பேசுவேன் என படக்குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறாராம்.
இதனால் படபப்பிடிப்பு தாமதமாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மேலும் சகுந்தலம் என்ற படமும் சமந்தா நடிப்பில் வெளியாக காத்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.