நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பா.ரஞ்சித் படத்துக்காக நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரமுடன் கைகோர்க்கும் பிரபலம்

இயக்குநர் பா.ரஞ்சித் படத்துக்காக நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரமுடன் பிரபல நடிகர் இணைந்து நடிக்கவிருக்கிறார். 

News image
Updated On :19 அக்டோபர் 2022, 9:28 am

DIN

இயக்குநர் பா.ரஞ்சித் படத்துக்காக நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரமுடன் பிரபல நடிகர் இணைந்து நடிக்கவிருக்கிறார். 

பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

இந்த நிலையில் இதில் நடிகர் பசுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். விக்ரமும் பசுபதியும் இணைந்து தூள், மஜா, அருள், பத்து எண்றதுக்குள்ள உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் இணைந்து இந்தப் படத்தில் நடிக்கவிருக்கின்றனர். மேலும் பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரையிலும் பசுபதி கலக்கியிருப்பார். 

Story image

மேலும் விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா மோகனனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறதாம். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கேஜிஎஃப்பில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்பைடாயகக் கொண்டு இந்தப் படம் உருவாகிவருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.