மாரி செல்வராஜின் அடுத்த பட ஹீரோ இவர்தான்..

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படத்தின் நாயகன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ்
இயக்குநர் மாரி செல்வராஜ்
Published on
Updated on
1 min read

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படத்தின் நாயகன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

‘பரியேறும் பெருமாள்’ ‘கர்ணன்’ திரைபடங்களை இயக்கிய மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘மாமன்னன்’ என்கிற புதிய படத்தை இயக்கிவந்தார்.

படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்று அடுத்தகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மாரி செல்வராஜ் அடுத்து இயக்கும் புதிய படத்தின் நாயகனாக துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாகவும் கபடி விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com