இந்நிலையில் நடிகர் பார்த்திபன், நடிகை ஐஸ்வர்யாராயுடன் எடுத்த புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், கவிதை வடிவில் ஐஸ்வர்யாராயை பாராட்டிய பதிவில், “ஐஸ் வாரியம் !...கற்றுக் கொள்ள…. காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில். அப்படி இப்பெண்ணிடமிருந்து… தாயானப் பிறகும், தான் விரும்பும் கலையை தொடர, ஆரோக்கியத்தை+அழகை காத்திட கடும் முயற்சியும், விடா பயிற்சியும் செய்கிறார். அழகென நான் காண்பது… பிறைநிலவு வானில் இருந்து மறையுமுன்னே முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர் வசனங்களை (இடை வரும் புன்னகை உட்பட) மனப்பாடம் செய்து one more கேட்கா egoவுடன் தயாராகிவிட்டு, பின் அனைவரிடமும்(selfie) அன்பொழுக பழகுகிறார்.” என்று வெளியிட்டுள்ளார்.