மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பிரபல திரையரங்கின் திரையைக் கிழித்த தனுஷ் ரசிகர்கள்

தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தைப் பார்க்கச் சென்ற ரசிகர்கள் சென்னையின் பிரபல திரையரங்கத்தின் திரையைக் கிழித்து அட்டகாசம் செய்துள்ளனர்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 10:53 am IST

தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தைப் பார்க்கச் சென்ற ரசிகர்கள் சென்னையின் பிரபல திரையரங்கத்தின் திரையைக் கிழித்து அட்டகாசம் செய்துள்ளனர்.

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களுக்கு பிறகு தனுஷ் - இயக்குநர் மிதர்ன் ஜவஹர் கூட்டணியில் மீண்டும் உருவான திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

அப்பா மகன் பாசத்தை அடிப்படையாக் கொண்டு வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படம் ‘ஹிட்’ என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

கர்ணன் படத்திற்குப் பின் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், மாறன், அத்ரங்கி ரே உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானதால் திரையரங்க வெளியீட்டுக்குக் காத்திருந்த ’திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் முதல்காட்சி நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கில் திரையிடப்பட்டது. அப்போது,  திரைக்கு முன் பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்த ரசிகர்கள் திடீரென திரையைக் குத்தி கிழித்ததால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.