12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

தேசிய கட்சியில் இணையும் திரிஷா?

நடிகை திரிஷா தேசிய கட்சி ஒன்றில் இணையவிருப்பதாக தகவல் வெளியானது. நடிகை திரிஷா தேசிய கட்சி ஒன்றில் இணையவிருப்பதாக தகவல் வெளியானது. 

Published On :

நடிகை திரிஷா தேசிய கட்சி ஒன்றில் இணையவிருப்பதாக தகவல் வெளியானது. 

தளபதி 67 படத்தில் திரிஷா நடிக்கவிருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் தளபதி 67 படத்தில் பாடல்களோ, காதல் காட்சிகளோ இல்லாமல் முழுக்க முழுக்க அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது. 

பொன்னியின் செல்வனை நடிகை திரிஷா மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். காரணம் பொன்னியின் செல்வனில் அவர் நடித்துள்ள குந்தவை கதாப்பாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அந்நாவலை படித்தவர்கள் அனைவரும் அறிவர்.

பொன்னியின் செல்வன் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் திரிஷா அரசியலுக்கு வரவிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தென்னிந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக திரிஷாவுக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாம். ஆனால் இதனை திரிஷாவின் அம்மா மறுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.