நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்துவருகிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுவருகிறது.
படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள ஏகே 62 திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும் என்று கூறப்படுகிறது.
நடிகர் அஜித் குமார் சமீபத்தில் தன்னை தல என்றோ வேறு பட்டப் பெயர்களைக் கொண்டோ அழைக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். ரசிகர்கள் தனது படம் வரும்போது திரையரங்கில் வந்து பார்த்தால் போதும் என்பது அவரது நிலைப்பாடாக இருக்கிறது.
இதையும் படிக்க | தேசிய கட்சியில் இணையும் திரிஷா?
இது ரசிகர்கள் மீது அவர் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது. அதன் ஒரு பகுதியாக நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்குமாரின் செய்தியை ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.
அவரது பதிவில், ''காதுகளைப் பார்த்துக்கொள்ளுங்கள். என்றும் அன்புடன் அஜித்குமார்'' என்று பதிவிட்டுள்ளார். 'காதுகளில் அடிக்கடி சத்தம் வந்தால் காதுகேட்கும் திறனை இழக்கக் கூடும்' என்ற விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார். நடிகர் அஜத்தின் அக்கறை ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.