ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

''என்னை மன்னிச்சிடுங்க'' - 'குருதி ஆட்டம்' இயக்குநர் வருத்தம்

குருதி ஆட்டம் பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் ரசிகர்களிடம் மன்னிப்புக்கேட்டார். 

News image
Updated On :23 ஆகஸ்ட் 2022, 1:54 pm IST

குருதி ஆட்டம் பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் ரசிகர்களிடம் மன்னிப்புக்கேட்டார். 

'8 தோட்டாக்கள்' படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஸ்ரீகணேஷ் அடுத்ததாக இயக்கிய படம் குருதி ஆட்டம். அதர்வா நாயகனாக நடித்திருந்த இந்தப் படத்தில் பிரியா பவானி ஷங்கர், ராதிகா, ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 

யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். கடந்த 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இந்த நிலையில் படத்தின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் தனது முகநூலில் ரசிகர்களிடம் மன்னிப்புக்கேட்டுள்ளார். அதில், ''குருதி ஆட்டம் வெளியீட்டின்போது ஆதரவளித்த எல்லோருக்கும் நன்றி. என்னிடம் சொல்வதற்கு வார்த்தைகளில்லை. 

இந்தப் படத்தில் இருக்கும் குறைகளுக்காக என்னை மன்னியுங்கள். கடினமாக உழைத்து என் அடுத்த படத்தை மிக சிறந்த படமாக கொடுப்பேன். குருதி ஆட்டம் திரையரங்கில் பார்க்க தவறியவர்களுக்காக வருகிற செப்டம்பர் 2 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.