மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

'ஊ சொல்றியா ?' - விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி

விஜய் டிவியில் ஊ சொல்றியா என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.  

News image
Updated On :27 ஆகஸ்ட் 2022, 12:53 pm IST

விஜய் டிவியில் 'ஊ சொல்றியா' என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

விஜய் டிவி நிகழ்ச்சிகள் எப்பொழுதும் ரசிகர்களை ஈர்க்கத் தவறியதில்லை. சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, பிக்பாஸ், குக் வித் கோமாளி என ஒவ்வொரு நிகழ்ச்சியும் சுவாரசியம் மிகுந்ததாக இருக்கின்றன. 

அதற்கு காரணம் எப்பொழுதும் புதிய களத்துடன் கூடிய நிகழ்ச்சிகளைக் கலகலப்பாக கொண்டு செல்வதில் முனைப்புடன் செயல்படுகிறது விஜய் டிவி. பெரும்பாலும் ஹிந்தி, ஆங்கில நிகழ்ச்சிகளை அப்படியே தமிழுக்கு ஏற்ப சுவாரசியமாக மாற்றுகின்றனர் அல்லது குக் வித் கோமாளி போன்ற புதிய நிகழ்ச்சியின் மூலமும் கவனம் ஈர்க்கின்றனர். 

அந்த வகையில் தற்போது ஊ சொல்றியா ஊஊ சொல்றியா என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களான மாகாப ஆனந்த் மற்றும் பிரியங்காவும் தொகுத்து வழங்கவிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி, சந்தோஷ் பிரதாப், பவித்ரா, சுனிதா போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சி எதனை பற்றியது என்பது நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியானால் தெரிந்துகொள்ளமுடியும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.