நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இயக்குநர் எச். வினோத் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் வலிமை படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றதாக கூறியுள்ளார். மேலும் ட்விட்டர், யூடியூபில் காசு வாங்கிக்கொண்டு போலியான தகவல்களை சொல்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.
இதற்கு “அம்மா சாப்ட்டு 6 நாள் ஆச்சு. இதுதான் நல்ல படமா?” என வலிமை படத்தின் வசனங்களை விஜய் ரசிகர்கள் இயக்குநர் வினோத்தை கிண்டல் செய்து வருகின்றனர். இயக்குநருக்கு விமர்சனத்தை தாங்கிக் கொள்ளும் குணம் இல்லையெனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து கூறி வருகின்றனர். இதற்கு அஜித் ரசிகர்கள், “நான் வேணுமா உன் இடுப்ப புடிச்சிக்கிட்டுமா?” என பீஸ்ட் படத்தின் வசனங்களை கிண்டல் செய்து வருகின்றனர்.

இயக்குநரின் இந்த பேட்டியை வைத்து அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டையிட்டு கொள்கிறார்கள்.
துணிவு படத்தின் பிரத்யோகமான அஜித்தின் படங்களும் சென்னை டைம்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
Swagmaxxxx new still of #AK from #Thunivu.
â Chennai Times (@ChennaiTimesTOI) December 4, 2022
If I say Ajith sir is playing a character with negative shades, audiences will immediately ask, âAppo #Mankatha va?â All I can say is, the film has everything that the audience likes to see.
- #HVinoth on #Ajith's role pic.twitter.com/UQ0YShj0ne
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுகவை தோற்கடித்த வாக்காளர்களுக்கு நல்ல சாவே வராது! சாபம் விடுகிறாரா ஆர்.எஸ். பாரதி?

பிரமிடு சுரங்கத்துக்குள் நுழைந்த ரோபோ! 4500 ஆண்டுகள் யாரும் தீண்டாத சீல் வைத்த கதவுகள்!!

எடப்பாடி பழனிசாமி Press Meet! | ADMK | Edappadi Palaniswami | EPS |

சென்னை உள்பட வட மாவட்டங்களில் இன்று மாலை மழைக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



