ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

நயன்தாராவா இது? ரசிகர்கள் அதிர்ச்சி

நயன்தாராவின் புதிய தோற்றம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:33 pm IST

நயன்தாராவின் புதிய தோற்றம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மாயா, இறவாக்காலம், கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன். இவர் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து அடுத்து இயக்கியுள்ள படம் - கனெக்ட். 

ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அனுபம் கெர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.  

இடைவேளை இல்லாத இத்திரைப்படம் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் தோற்றப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில், நயன்தாரா ஒடுங்கிய முகத்துடன் மிக ஒல்லியான தோற்றத்தில் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

Story image

பலரும் இணையத்தில் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து வருகிறார்கள். 

அதேநேரம், இப்படத்தில் நயன்தாரா தாயாக நடித்திருப்பதால் வயது அதிகமாக தெரிய வேண்டும் என்பதற்காக இந்தத் தோற்றத்தில் நடித்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.