அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ராம் சரண் வெளியிட்ட நற்செய்தி! 

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு நற்செய்தியை பகிர்ந்துள்ளார்.  

News image
Updated On :12 டிசம்பர் 2022, 10:37 am

DIN

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு நற்செய்தியை பகிர்ந்துள்ளார்.  

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் அவர்களுடன் இணைந்து தனது 15வது படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வ தகவல் வெளியானது. 

திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. கடந்த ஜூலையில் ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவின் நிகழ்ச்சியில் ராம் சரணின் மனைவி உபசனா கலந்துகொண்டார். நிகழ்வில் பேசிய உபசனா, ''நானும் என் கணவர் ராம் சரணும் 10 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறோம். எங்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை” என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நடிகர் ராம்சரண் தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு நற்செய்தியை பகிர்ந்துள்ளார். அவருக்கும் அவரது மனைவி உபசனாவுக்கும் விரைவில் குழந்தை பிறக்க உள்ளதென அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட போஸ்டரில், “ஸ்ரீ அனுமான் அவர்களின் ஆசியுடன், ராம் சரண் & உபசனா அவர்களின் முதல் குழந்தையை எதிர்நோக்கியுள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் சிரஞ்சீவி குடும்பத்தினர்” என பதிவிட்டுள்ளார். 

Story image

இந்த அறிவிப்பின் மூலம் அவர்களுக்கு முதல் குழந்தை பிறக்க போவது உறுதியானதால் ரசிகர்கள் ட்விட்டரில் ராம்சரண் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.