குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஷாருக்கானின் பதான்: ‘அழையா மழை’ தமிழ் பாடல் வெளியீடு

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள பதான் படத்திலிருந்து ‘அழையா மழை’ என்ற தமிழ் பாடல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2022, 12:38 pm IST

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள பதான் படத்திலிருந்து ‘அழையா மழை’ என்ற தமிழ் பாடல் வெளியாகியுள்ளது.

ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தினை இயக்குநர் ஆதித்யா சோப்ரா இயக்கி வருகிறார். இந்த படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி வெளியாகிறது.

தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பள் கபாடியா ஆகியோர் நடிக்கும் இப்படத்தை யாஷ் ராஜ் நிறுவனம் தயாரிக்கிறது. யாஷ் ராஜ் தயாரிப்பின் 50வது படமென்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் ‘அழையா மழை’ என்ற பாடல் தமிழ், தெலுங்கும், ஹிந்தி மொழிகளில் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஷாருக்கான் தமிழில் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “இது என் புதிய  பேஷாரம் ரங் பாடல் தமிழில் அழையா மழை என்ற பெயரில். இப்ப பாருங்கள்! ஜனவரி 25, 2023 அன்று உங்களுக்கு அருகிலுள்ள பெரிய திரையில் மட்டுமே பதான் படத்தை கொண்டாடுங்கள். இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது.” என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் அட்லி ஹாருக்கானை வைத்து எடுக்கும் ஜவான் படமும் இந்தி மற்றும் தமிழில் வெளியாவதால் பதான் படமும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.