நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலியாக வந்து அனைவரையும் அசரடித்தவர் 2022-ல் அதிக படங்களில் நடித்த நாயகி என்கிற புதிய சாதனையை படைத்துள்ளார்.
இதையும் படிக்க: ’மது அருந்தினால்தான் தூக்கமே வரும்’ மனம் திறந்த ரஜினி பட நாயகி!
அதாவது, இந்தாண்டில் மட்டும் இவர் நடிப்பில் தமிழில் புத்தம் புது காலை விடியாதா, கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி மலையாளத்தில் நாக்அவுட், குமாரி மற்றும் தெலுங்கில் அம்மு, கோட்சே என மொத்தம் 9 படங்கள் வெளியாகியுள்ளது. இதில் கார்கி, குமாரி படங்களை தயாரித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு நடிகையும் ஒரே ஆண்டில் இத்தனை படங்களில் நடிக்கவில்லை என்பதால் சாதனை செய்திருக்கிறார் ஐஸ்வர்யா லக்ஷ்மி!