ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

நடிகர் விஜய்யின் பீஸ்ட் அப்டேட் இன்று வெளியாகிறது

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் அப்டேட் இன்று(பிப்ரவரி 7) மாலை 6 மணிக்கு வெளியாகிறது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 1:50 pm IST

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ளார்.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய்யும், டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் நெல்சனும் இணைவதால் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. 

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. 

இந்த நிலையில் இந்தப் படத்தின் அப்டேட் இன்று (பிப்ரவரி 7) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்போ அல்லது முதல் பாடல் குறித்த அறிவிப்போ இருக்கலாம் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடலை விஜய் பாடியுள்ளதாகவும், இந்த பாடல் குறித்த அறிவிப்பு விடியோவில் நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன், அனிருத், இயக்குநர் நெல்சன் ஆகியோர் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.