ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

'மாநாடு' பட ரீமேக் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம் : சிம்பு வேடத்தில் இந்த ஹீரோ நடிக்கிறாரா ?

மாநாடு படத்தின் ரீமேக் உரிமையை சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

News image
Updated On :6 ஜனவரி 2022, 3:09 pm IST

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் கடந்த வருடம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சிம்புவின் திரையுலக வாழ்வில் இந்தப் படம் திருப்புமுனையாக அமைந்தது. 

இந்தப் படத்தின் அனைத்து இந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமை, தெலுங்கில் மொழி மாற்றம் செய்யும் உரிமையை பிரபல தெலங்கு தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

மாநாடு தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழ், தெலுங்கில் ஒரே நாளில் வெளியாகவிருந்தது. நடிகர் எஸ்.ஜே.சூர்யாவே தெலுங்கிலும் தனது வேடத்துக்கு பின்னணி குரல் கொடுத்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் தெலுங்கில் மாநாடு திரைப்படம் வெளியாகவில்லை. 

Story image

சுரேஷ் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் பெரும்பாலான படங்களில் வெங்கடேஷ் தான் கதாநாயகனாக நடிப்பார். தமிழில் வெற்றி பெற்ற இறுதிச்சுற்று, அசுரன் ஆகிய படங்களில் வெங்கடேஷ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் மாநாடு பட ரீமேக்கிலும் வெங்கடேஷ் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.