வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

கத்ரீனா கைஃப், ஷாருக் கானுக்கு கரோனா பாதிப்பு

பாலிவுட் திரையுலகைச் சோ்ந்த பிரபல நடிகா் ஷாருக் கான், நடிகை கத்ரீனா கைஃப் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

News image
Updated On :6 ஜூன் 2022, 2:56 am IST

பாலிவுட் திரையுலகைச் சோ்ந்த பிரபல நடிகா் ஷாருக் கான், நடிகை கத்ரீனா கைஃப் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கடந்த சில நாள்களாக நாட்டில் கரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. முக்கியமாக மகாராஷ்டிரத்தில் கரோனா பரவல் வேகம் சற்று அதிகமாகவே உள்ளது. இது அங்குள்ள திரை பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. ஏற்கெனவே நடிகா்கள் காா்த்திக் ஆா்யன், ஆத்யா ராய் கபூா் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில் இப்போது ஷாருக் கான், கத்ரீனா கைஃப் ஆகியோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அவா்களுக்கு பாதிப்பு மிதமான அளவில் உள்ளதால், மருத்துவா்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வருக்கு கரோனா:

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸுக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவரும் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா்.

மகாராஷ்டிர சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவரான ஃபட்னவீஸுக்குக் கடந்த 2020 அக்டோபரிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.