25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ஜென்டில்மேன் 2 இயக்குநர் யார்?: அறிவித்தார் குஞ்சுமோன்

ஜென்டில்மேன் 2 படம் பற்றிய புதிய அறிவிப்பை குஞ்சுமோன் வெளியிட்டுள்ளார்.

Published On :6 பிப்ரவரி 2024, 6:16 pm IST

ஜென்டில்மேன் 2 படத்தின் இயக்குநர் பற்றிய தகவலை இன்று வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் குஞ்சுமோன்.

அர்ஜூன், மதுபாலா நடிப்பில் ஏ,ஆர். ரஹ்மான் இசையமைப்பில் ஷங்கர் இயக்கிய முதல் படம் - ஜென்டில்மேன். 1993-ல் வெளியான இப்படத்தை கே.டி. குஞ்சுமோன் தயாரித்தார். பிறகு காதலன், காதல் தேசம், ரட்சகன் போன்ற பிரமாண்டப் படங்களைத் தயாரித்து 90களில் பிரபலமான தயாரிப்பாளராக விளங்கினார். 1999-ல் என்றென்றும் காதல் படத்தைத் தயாரித்ததுடன் அவர் வேறு படங்களைத் தயாரிக்கவில்லை.

21 வருடங்கள் கழித்து கடந்த 2020-ல் மீண்டும் படம் தயாரிக்க முடிவெடுத்தார். ஜென்டில்மேன் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஜென்டில்மேன் 2 படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் என அறிவித்தார். நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால் போன்ற நடிகைகள் நடிக்கிறார்கள். இசை - கீரவாணி. 

இந்நிலையில் ஜென்டில்மேன் 2 படம் பற்றிய புதிய அறிவிப்பை குஞ்சுமோன் வெளியிட்டுள்ளார். ஜென்டில்மேன் 2 படத்தை கோகுல் கிருஷ்ணா இயக்குவார் என இன்று அவர் அறிவித்துள்ளார். கோகுல் கிருஷ்ணா, இதற்கு முன்பு ஆஹா கல்யாணம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.