வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

ஜென்டில்மேன் 2 இயக்குநர் யார்?: அறிவித்தார் குஞ்சுமோன்

ஜென்டில்மேன் 2 படம் பற்றிய புதிய அறிவிப்பை குஞ்சுமோன் வெளியிட்டுள்ளார்.

News image
Updated On :6 ஜூன் 2022, 5:49 pm IST

ஜென்டில்மேன் 2 படத்தின் இயக்குநர் பற்றிய தகவலை இன்று வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் குஞ்சுமோன்.

அர்ஜூன், மதுபாலா நடிப்பில் ஏ,ஆர். ரஹ்மான் இசையமைப்பில் ஷங்கர் இயக்கிய முதல் படம் - ஜென்டில்மேன். 1993-ல் வெளியான இப்படத்தை கே.டி. குஞ்சுமோன் தயாரித்தார். பிறகு காதலன், காதல் தேசம், ரட்சகன் போன்ற பிரமாண்டப் படங்களைத் தயாரித்து 90களில் பிரபலமான தயாரிப்பாளராக விளங்கினார். 1999-ல் என்றென்றும் காதல் படத்தைத் தயாரித்ததுடன் அவர் வேறு படங்களைத் தயாரிக்கவில்லை.

21 வருடங்கள் கழித்து கடந்த 2020-ல் மீண்டும் படம் தயாரிக்க முடிவெடுத்தார். ஜென்டில்மேன் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஜென்டில்மேன் 2 படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் என அறிவித்தார். நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால் போன்ற நடிகைகள் நடிக்கிறார்கள். இசை - கீரவாணி. 

இந்நிலையில் ஜென்டில்மேன் 2 படம் பற்றிய புதிய அறிவிப்பை குஞ்சுமோன் வெளியிட்டுள்ளார். ஜென்டில்மேன் 2 படத்தை கோகுல் கிருஷ்ணா இயக்குவார் என இன்று அவர் அறிவித்துள்ளார். கோகுல் கிருஷ்ணா, இதற்கு முன்பு ஆஹா கல்யாணம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.