மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழா தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது.
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கி வருகிறார் இயக்குநர் மணி ரத்னம்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியாகவுள்ளதாக மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூலை மாதம் முதல் வாரத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. படக்கதைக்கு மிகவும் பொருத்தமான ஊரான தஞ்சாவூரில் டீசர் வெளியிட்டு விழா நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்குப் பிறகு உலகின் முக்கியப் பகுதிகளுக்குச் சென்று படத்தை விளம்பரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.