மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

நெல்சனின் 'கோலமாவு கோகிலா' ஹிந்தி ரீமேக் - முக்கிய தகவல்

நெல்சனின் கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக்கான குட் லக் ஜெர்ரி திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வருகிற ஜூலை 29 ஆம் தேதி வெளியாகிறது. 

Published On :

நெல்சனின் கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக்கான குட் லக் ஜெர்ரி திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வருகிற ஜூலை 29 ஆம் தேதி வெளியாகிறது. 

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடித்திருந்த கோலமாவு கோகிலா திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். 

Story image

சாதாரண குடும்பம் எப்படி போதை மருந்தை கடத்துகிறார்கள் என்ற சுவாரசியமான கதையமைப்புடன் இந்தப் படம் உருவாகியிருந்தது. சிவகார்த்திகேயன் எழுதிய கல்யாண வயசு பாடல் மிகவும் பிரபலமானது. 

இந்தப் படம் ஹிந்தியில் ஜான்வி கபூர் நடிப்பில் குட் லக் ஜெர்ரி என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை சித்தார்த் சென் இயக்கியுள்ளார். 

Story image

இந்தப் படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆனந்த் எல் ராயின் கலர் எல்லோ புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இந்தப் படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 

இந்தப் படம் நயன்தாராவைப் போல ஜான்வி கபூருக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெயரைப் பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.