தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

வெளியானது நடிகர் விஜய்யின் வாரிசு 3வது போஸ்டர்

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் 3வது போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:17 pm IST

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் 3வது போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 

நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்த நிலையில் அவர் அடுத்ததாக நடிக்கும் தளபதி 66 படத்தை ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (ஜூன் 21) இந்தப் படத்துக்கு வாரிசு என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு போஸ்டரும்  வெளியானது. 

Story image

போஸ்டர் மற்றும் தலைப்பு ரசிகர்களைக் கவரவில்லை என்பதை ரசிகர்களின் சமூக வலைதள பதிவுகள் காட்டின. ஆனால் இன்று (ஜுன் 22) வெளியான இரண்டாவது போஸ்டருக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. இந்த நிலையில் 3வது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் விஜய் பைக்கின் மேல் ஸ்டைலாக அமர்ந்திருக்கிறார். 

வாரிசு என்ற தலைப்பை வைத்தே படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் தங்களது கணிப்பை வெளிப்படுத்திவருகின்றனர். பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்த வாரிசான விஜய், தனது குடும்பத்துக்கு வரும் சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.