தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தும் படத்தில் விஜய் சேதுபதி?

நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடிக்கும் மலையாளத் திரைப்படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

News image

கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தும் படத்தில் விஜய் சேதுபதி?

Updated On :1 பிப்ரவரி 2024, 3:06 pm IST

நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடிக்கும் மலையாளத் திரைப்படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியின் பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் அவரின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

19(1)(a) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகை நித்யா மேனன் நடிக்கிறார். புதுமுக இயக்குநர் இந்து இயக்கும் இந்தத் திரைப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். 

கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தும் கதையம்சத்தை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

படத்தலைப்பான 19(1)(a) என்பது இந்திய அரசியலமைப்பின் கருத்து தெரிவிக்கும் உரிமையை உறுதி செய்யும் சட்டப்பிரிவாகும். இந்நிலையில் இந்தத் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.