மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

இசையமைப்பாளராகும் இயக்குநர் மிஷ்கின் - யார் படத்துக்கு தெரியுமா ?

இயக்குநர் மிஷ்கின் முதன் முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகவிருக்கிறார். 

Published On :

இயக்குநர் மிஷ்கின் முதன் முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகவிருக்கிறார். 

பாடகராக, பாடலாசிரியராக தனது படங்களில் இசை பணிகளில் ஆர்வம் செலுத்தி வந்த இயக்குநர் மிஷ்கின், முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகவிருக்கிறார். 

மிஷ்கினின் சகோதரரும், சவரக்கத்தி படத்தின் இயக்குநருமான ஆதித்யா அடுத்ததாக டெவில் என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்கிறார். 

இந்தப் படத்தை மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் தயாரிக்கிறார். மாறா, குதிரைவால் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துக்குமார் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். வால்டர், செல்ஃபி படங்களுக்கு படத்தொகுப்பு செய்த எஸ். இளையராஜா படத்தொகுப்பாளராகவும், மரியா கெர்ளி கலை இயக்குநராகவும் பணிசெய்கின்றனர். 

டெவில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் மிஷ்கின் நான்கு பாடல்களுக்கு இசயமைத்துள்ளாராம். விரைவில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.