சொந்த அனுபவத்திலிருந்து கூறுகிறேன்: ஐஸ்வர்யா ரஜினி

இன்னும் தாமதம் செய்யவேண்டாம் என்றார். 
சொந்த அனுபவத்திலிருந்து கூறுகிறேன்: ஐஸ்வர்யா ரஜினி
Published on
Updated on
1 min read

அனைவரும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும் என ஐஸ்வர்யா ரஜினி தெரிவித்துள்ளார். 

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினி - 3, வை ராஜா வை ஆகிய படங்களையும் சினிமா வீரன் என்கிற ஆவணப் படத்தையும் இயக்கியுள்ளார். 2004-ல் நடிகர் தனுஷைத் திருமணம் செய்தார். பிறகு இருவரும் பிரிவதாகச் சமீபத்தில் தெரிவித்தார்கள்.

இன்ஸ்டகிராம் தளத்தில் உடற்பயிற்சி தொடர்புடைய விழிப்புணர்வுப் பதிவுகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி. சமீபத்தில் அவர் எழுதியதாவது:

அமைதியான நடைபாதைகள். பெரும்பாலும் என்னுடைய காலைவேளை சைக்கிள் பயணத்துடன் தொடங்கும். ஏதோவொரு உடற்பயிற்சி உங்களுக்கு ஒருபோதும் தீமை செய்யாது. என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து கூறுகிறேன், தினமும் உடற்பயிற்சிக்கு என சிறிது நேரம் ஒதுக்குங்கள். ஏற்கெனவே மே மாதம் ஆகிவிட்டது. இன்னும் தாமதம் செய்யவேண்டாம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com