மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தனுஷின் அடுத்த படப் பூஜை! வைரலாகும் புகைப்படங்கள்

மீண்டும் தெலுங்கு இயக்குநருடன் இணையும் நடிகர் தனுஷின் அடுத்த படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.

News image
Updated On :28 நவம்பர் 2022, 4:16 pm IST

மீண்டும் தெலுங்கு இயக்குநருடன் இணையும் நடிகர் தனுஷின் அடுத்த படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர், தெலுங்கு இயக்குநர் வெங்கி அத்லூரியின் வாத்தி ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

Story image

இந்நிலையில், லவ் ஸ்டோரி, ஃபிடா உள்ளிட்ட தெலுங்கு படங்களை இயக்கிய சேகர் கம்முலா படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகவுள்ள இந்த படத்தின் பூஜை ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது.

மேலும், படத்தில் நடிக்கவிருக்கும் பிற நடிகர்களின் தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும், படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Story image

இதனிடையே தனுஷின் அடுத்த தமிழ் - தெலுங்கு படமான வாத்தி அடுத்தாண்டு பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.