‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பிரபாஸ் காதலில் விழுந்த ஹிந்தி நடிகை!

பிரபல நடிகர் பிரபாஸும் ஹிந்தி நடிகை ஒருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் பிரபாஸ்

Published On :

பிரபல நடிகர் பிரபாஸும் ஹிந்தி நடிகை ஒருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகுபலி, பாகுபலி 2 என வரிசையாக ஹிட் படங்கள் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். இவர் நடிக்கும் படங்கள் பான் இந்தியா படங்களாக ரிலீஸ் செய்து வசூல் வேட்டை நடத்துகிறது. இதனால், இவரின் சம்பளமும் ரூ. 100 கோடியாக உயர்த்தியுள்ளார்.

இவர், தற்போது நடித்து வரும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றதால், மீண்டும் சில காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு, கிராபிக்ஸ் சரி செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனால், ஆதிபுருஷ் படத்தின் வெளியீட்டு தேதியும் தள்ளி போயுள்ளன.

இதையும் படிக்க | விரைவில் திரிஷ்யம் 3?

ராமாயண கதையை மையமாக எடுக்கப்பட்டிருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸும், சீதா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை கிருத்தி சனோனும் நடித்துள்ளனர்.

இந்த படப்பிடிப்பின் போது, இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு வருகின்றது.

இதற்கிடையே, சில நாள்களுக்கு முன்பு கிருத்தி சனோன் பேட்டி ஒன்றில், பிரபாஸை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.

ஏற்கெனவே பாகுபலி நாயகி அனுஷ்காவை பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக கிசுகிசு பரவி ஓய்ந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.