இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ முதல் நான்கு நாட்களில் ரூ.50 கோடிகளுக்கு மேலாக வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா வெற்றிகளுக்குப் பிறகு 3-வது முறையாக இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதையும் படிக்க: பிழைப்பில் மண் அள்ளிப் போடுகிற விமர்சனமா இது?: கெளதம் மேனன்
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி.கே. கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சித்தார்த்தா நுனி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்திற்கான கதையை எழுதியுள்ளார்.
சமீபத்தில் படத்துக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளதால் ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாகப் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
உலகம் முழுவதும் 4 நாட்களில் (ஞாயிற்றுகிழமை வரை) 50.56 கோடிகள் வசூலானதாக தகவல் வெளியாகியுள்ளது.