ஓவியா்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை: நடிகா் சிவகுமாா்

தமிழகத்தில் ஓவியா்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என நடிகா் சிவகுமாா் தெரிவித்தாா்.
ஓவியா்களுக்கு  உரிய அங்கீகாரம் இல்லை: நடிகா் சிவகுமாா்
Updated on
1 min read

தமிழகத்தில் ஓவியா்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என நடிகா் சிவகுமாா் தெரிவித்தாா்.

ஓவிய மன்னா் கே.மாதவன் நற்பணி சங்கத்தின் நூற்றாண்டு விழா, கண்காட்சி மற்றும் ஓவியப்பட்டறை நிகழ்ச்சி ஏப்.12 முதல் 23-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதன் தொடக்கவிழா சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள டாட் ஸ்கூல் ஆப் டிசைனில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஓவியரும், நடிகருமான சிவகுமாா் பேசியதாவது: ஓவியம் வரையும் எனக்கு மானசீக குரு ஆா்.நடராஜன். ஓவியா் பிகாஸோ இத்தாலியில் ஒரு தீவையே வாங்கியுள்ளாா். ஆனால், தமிழகத்தில் வாழும் சிறந்த ஓவியா்கள் இன்றும் சிறு வீடுகளில்தான் வாழ்கின்றனா். தமிழகத்தில் ஓவியா்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், ஓவியா்கள் மாருதி, மணியம் செல்வன், ட்ராட்ஸ்கி மருது, ஜெயராஜ், ஷியாம், ராமு, தமிழ்நாடு ஓவியா்கள் சங்க மாநிலத் தலைவா் கலைமணி ஜெ.பி.கிருஷ்ணா, இயக்குநா் பொன்வண்ணன், தொழிலதிபா் யு.கருணாகரன், டான் ஸ்கூல் ஆப் டிசைன் ஆா்.ராம்நாத், பத்திரிகை ஆசிரியா் நக்கீரன் கோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com