விஷாலைப் பொறுக்கி என்றதற்காக... மனம் திறந்த மிஷ்கின்!
நடிகர் விஷால் குறித்து இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளார்.


ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவான ‘அடியே’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது, நிகழ்வில் பேசிய இயக்குநர் மிஷ்கின், “நடிகர் விஷாலை ஒருமுறை பொறுக்கி எனக் கூறிவிட்டேன். அதற்காக, பலரும் அதை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்தி வருகின்றனர். விஷாலும் அவருக்கு நான் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி வருகிறார். நான் அப்படி என்ன துரோகத்தை செய்தேன் எனத் தெரியவில்லை. நாங்கள் சண்டை போட்டது உண்மைதான். என்னைவிட விஷாலுக்கு ஆணவம் அதிகம். அதைத் தவிர்க்க வேண்டும். ஆனாலும், விஷால் இனிமையானவர். இப்படிச் சொல்வதால் நான் அவரிடம் வாய்ப்பு கேட்பதாகக் கூறுவார்கள். இனி ஒருபோதும் விஷாலுடன் இணைய மாட்டேன். இப்போதும், நான் விஷாலை மிஸ் பண்ணுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: 100 நாள்களை நிறைவு செய்த சண்டக்கோழி தொடர்!
துப்பறிவாளன் - 2 படத்தின் ஆரம்பகட்ட பணிகளால் விஷால் அதிக பணத்தை இழந்ததாகவும் அதனாலேயே மிஷ்கினுக்கும் அவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...