கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்: சூர்யா
விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.


விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணன் விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.! கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்.!! இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காய்ச்சலுடன் கூடிய தொடர் இருமல், சளி பாதிப்புக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தின் உடல் நிலையில், சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், செயற்கை சுவாச சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் புதன்கிழமை தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, விஜயகாந்த்தின் உடல்நிலை மோசமடைந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை வெளியே நேற்று தேமுதிக தொண்டர்கள் குவியத் தொடங்கினர். தனியார் மருத்துவமனை வெளியே தொண்டர்கள் குவிந்ததால், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...